திரு. டெரன்ஸ் குமார

தலைமை நிர்வாக அதிகாரி

திரு. டெரன்ஸ் குமார அவர்கள் ஜூன் 15, 2022 அன்று துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு, ஜனவரி 9, 2023 முதல் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் .

 

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம்:

இவர் ஒரு சிறந்த கல்வி அடித்தளத்துடன் ஒரு அனுபவமிக்க நிதித் துறை நிபுணராக உள்ளார் .உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிதி, குத்தகை, பெருநிறுவன நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மை ஆகிய துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பன்முக நிபுணத்துவத்தை பெற்றுள்ளார் . மேலும் நிதி அறிக்கை, வரிவிதிப்பு, மூலதன சந்தை பரிவர்த்தனைகளை கட்டமைத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில்  விரிவான அனுபவங்களை கொண்டுள்ளார் .திரு. டெரன்ஸ் குமார அவர்களுக்கு  உள் கட்டுப்பாடுகள், சட்டப்பூர்வ, இணக்கம் மற்றும் நிதி இடர் மேலாண்மை ஆகியவற்றை வடிவமைப்பதில்  பல வருட அனுபவமும் உள்ளதோடு வணிகத் தேவைகளை பெஸ்போக்(bespoke ) சேவை வழங்கல் மூலம் செயல்படுத்தக்கூடிய உத்திகளாக பகுப்பாய்வு செய்தல், அடையாளம் காண்பது மற்றும் மொழிபெயர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் . மேலும், இவர் சனச அபிவிருத்தி வங்கியில் கடமையாற்றிய காலத்தில், டிஜிட்டல் தளத்தின் ஊடாக இலங்கையின் முதலாவது உரிமைப் பிரச்சினையை முன்னெடுத்துச் செயற்படுத்தியுள்ளார்.

 

முன்னாள் நியமனங்கள்:

இவர் PMF Finance PLC இல் இணைவதற்கு முன்னர் SANASA Development Bank PLC இல் பிரதான நிதி அதிகாரியாக இருந்தார்பணிபுரிந்துள்ளார் , மேலும் Lisvin Investments Ltd., Assetline இன் நிதிக் கட்டுப்பாட்டாளராகவும்  Ali Al Aufy Group of Companies இன் தலைமை நிதி அதிகாரியாகவும் , பின்தங்கிய தீர்வுகளுக்கான Lanka Financial Services யிலும் Leasing Co. Ltd., Lanka Tech Computers மற்றும் Jayaweera & Company ஆகிய நிறுவங்களிலும் பட்டய கணக்காளராக பணியாற்றியுள்ளார்.

திரு. டெரன்ஸ் குமார

தலைமை நிர்வாக அதிகாரி

திரு. டெரன்ஸ் குமார அவர்கள் ஜூன் 15, 2022 அன்று துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு, ஜனவரி 9, 2023 முதல் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் .

 

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம்:

இவர் ஒரு சிறந்த கல்வி அடித்தளத்துடன் ஒரு அனுபவமிக்க நிதித் துறை நிபுணராக உள்ளார் .உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிதி, குத்தகை, பெருநிறுவன நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மை ஆகிய துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பன்முக நிபுணத்துவத்தை பெற்றுள்ளார் . மேலும் நிதி அறிக்கை, வரிவிதிப்பு, மூலதன சந்தை பரிவர்த்தனைகளை கட்டமைத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில்  விரிவான அனுபவங்களை கொண்டுள்ளார் .திரு. டெரன்ஸ் குமார அவர்களுக்கு  உள் கட்டுப்பாடுகள், சட்டப்பூர்வ, இணக்கம் மற்றும் நிதி இடர் மேலாண்மை ஆகியவற்றை வடிவமைப்பதில்  பல வருட அனுபவமும் உள்ளதோடு வணிகத் தேவைகளை பெஸ்போக்(bespoke ) சேவை வழங்கல் மூலம் செயல்படுத்தக்கூடிய உத்திகளாக பகுப்பாய்வு செய்தல், அடையாளம் காண்பது மற்றும் மொழிபெயர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் . மேலும், இவர் சனச அபிவிருத்தி வங்கியில் கடமையாற்றிய காலத்தில், டிஜிட்டல் தளத்தின் ஊடாக இலங்கையின் முதலாவது உரிமைப் பிரச்சினையை முன்னெடுத்துச் செயற்படுத்தியுள்ளார்.

 

முன்னாள் நியமனங்கள்:

இவர் PMF Finance PLC இல் இணைவதற்கு முன்னர் SANASA Development Bank PLC இல் பிரதான நிதி அதிகாரியாக இருந்தார்பணிபுரிந்துள்ளார் , மேலும் Lisvin Investments Ltd., Assetline இன் நிதிக் கட்டுப்பாட்டாளராகவும்  Ali Al Aufy Group of Companies இன் தலைமை நிதி அதிகாரியாகவும் , பின்தங்கிய தீர்வுகளுக்கான Lanka Financial Services யிலும் Leasing Co. Ltd., Lanka Tech Computers மற்றும் Jayaweera & Company ஆகிய நிறுவங்களிலும் பட்டய கணக்காளராக பணியாற்றியுள்ளார்.

திரு. அமில கட்டுவாவல

துணை பொது முகாமையாளா கடன் மட்டும் நடவடிக்கைகள்

திரு. கட்டுவாவல, வங்கி மற்றும் நிதிக் கம்பனிகளில் தொழில் ஆற்றியதன் மூலம் 18 வருடங்களுக்கு மேலான அனுபவத ;தினைக் கொண்டுள்ளார். கடன் அனுமதி, கடன ; நிர்வாகம் மற்றும் வசூலிப்பு, கடன் ஆபத்து , புதிய விளை பொருள் அபிவிருத்தி, மூலோபாயத் திட்டமிடல், கடன் செயற்பாடுகள் மற்றும் பயிற்சி அளி;த ;தல் போன்ற துறைகளில் திறமைசாலி ஆவார். அவர் DFCC வங்கியில் பயிற்சி கடன் உத தியோகத்தராக தனது சேவையை ஆரம்பித்ததுடன் ஓரியன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி , ICICI வங்கி மற்றும் சொப்ட் லொஜிக் ஃபைனான்ஸ் பிஎல்சி போன ;ற கம ;பனிகளில் கடன் மற்றும் அபிவிருத்தி துறைகளில் முக ;கிய பதவிகளை வகித்துள்ளார். அமில ,கார்டிப ; மெற்றோபொலிட்டன் பல்கலைக் கழகத்தின் (UK) MBA பட்டம் மற்றும் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் கடன் நிர்வாக டிப்ளோமா என்பவற்றையும பெற்றுள்ளார். திரு. கட்டுவாவல தற்சமயம் கடன பிரிவு, தொழில் முனைவோர் நிதி வழங்கும் பிரிவு, முச்சக்கர வண்டி பிரிவு மற்றும் கம்பனியின் கடன் ரூ நிலையான வைப்புப் பிரிவு மற்றும் விளிம்பு வர்த ;தகம் என்பவற்றின் செயற்பாடுகளுக்கும் தலைமை வகிக்கின்றார்.

திரு. திலான் வசந்த

திரு. திலான் வசந்த

திரு. வசந்த அவர்கள்  2023 ஜனவரியில் PMF இல் நிதி திரட்டல் பிரிவில்  துணை பொது முகாமையாளராக (DGM) இணைந்து கொண்டதோடு , வைப்பு திரட்டல் நடவடிக்கைக்கு பொறுப்பாக செயற்பட்டு வருகிறார் . நிதித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட திரு. வசந்த அவர்கள்  , குறிப்பாக கடன்  பொறுப்பு சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

PMF இல் இணைவதற்கு முன், திரு. வசந்த அவர்கள்  நேஷன் லங்கா நிதி நிறுவனத்தில் நிலையான வைப்புத்தொகை மற்றும் வணிக மேம்பாட்டுக்கான பொது முகாமையாளராகவும்  கொமர்ஷியல் கடன் நிதி நிறுவனத்தில் நிலையான வைப்புத்தொகைகளுக்கான உதவி பொது முகாமையாளராகவும் ,சிலிங்கோ கிரமீன் கடன் நிறுவனம் லிமிடெட் (இப்போதைய எச்என்பி நிதி) இல் முதலீட்டுக்கான உதவி பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு. வசந்த அவர்கள்  வர்த்தக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமாவையும் , இலங்கையின் அக்குய்னஸ் உயர் கற்கைகள் கல்லூரியில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் டிப்ளோமா கற்கை நெறிகளையும்  பூர்த்தி செய்துள்ளார் , இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தில் நிதி முகாமைத்துவப் பாடநெறியைப் பின்பற்றியதோடு  மூலோபாய முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தில் முதுகலைப் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார். (APE qualification)

திரு.தினில் பெரேரா

தகவல் தொழில்நுட்ப மாற்றத் தலைவர்

திரு. தினில் பெரேரா அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான வங்கித்துறை அனுபவம் கொண்ட, பயனுள்ள நுட்ப முகாமையாளர். தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை, செயல்படுத்தல் மேலாண்மை, திட்டம்/நிலைப்பு மேலாண்மை, தரவு மைய மேலாண்மை, நுகர்வோர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் போன்ற துறைகளில் பரந்த அறிவு மற்றும் அனுபவம் கொண்டவர்.

திரு. பெரேரா அவர்கள் 1989 இல் இலங்கையின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் .இவர் அதை தொடர்ந்து கத்தார் வணிக வங்கி மற்றும் UAE ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றில் IT இல் உயர் பதவிகளை வகித்துள்ளார் . PMF இல் சேர்வதற்கு முன்பு, அவர் SDB வங்கியில் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக பணியாற்றிள்ளார் . திரு. பெரேரா அவர்கள் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தில் இடைநிலை வங்கியியல் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளதோடு சான்றளிக்கப்பட்ட திட்ட மேலாண்மை நிபுணராகவும் (PMP) திட்ட மேலாண்மை நிறுவனத்தின் (PMI) உறுப்பினராகவும் உள்ளார்.

திரு. சஹன் ரொட்ரிகோ

மீட்பு மற்றும் ரியல் எஸ்டேட் உதவி பொது முகாமையாளர்

திரு. ரொட்ரிகோ அவர்கள் PMF இன் மீட்பு நடவடிக்கைக்கு மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகிறார் . நிதி துறையில், குறிப்பாக மீட்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளில் 18 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட திரு. ரொட்ரிகோ அவர்கள் சிலோன் மெர்கன்ட் லீசிங் நிறுவனத்தில் வங்கி உதவியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் ஆரம்பித்தார். மேலும் இவர் சென்ட்ரல் ஃபினான்ஸ் பிஎல்சியில் பணியாற்றியுள்ளதோடு சொப்ட்லொஜிக் ஃபினான்ஸ் பிஎல்சியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

திரு. ரொட்ரிகோ அவர்கள் இங்கிலாந்தின் கார்டிஃப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷைர் நியூ யுனிவர்சிட்டியில் எல்.எல்.பி (Hons) பட்டத்தையும் பெற்றுள்ள திரு. ரொட்ரிகோ அவர்கள் கிரெடிட் மேனேஜ்மென்ட் டிப்ளமோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் என்.சி.சி இன்டர்நேஷனல் டிப்ளோமா கற்கைநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் இணை உறுப்பினராவார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது .

திரு. ரொட்ரிகோ அவர்கள் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தை பெற்றுள்ளார்.அத்தோடு இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICASL) சக உறுப்பினராகவும் , இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும் (CMASL),இலங்கை கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (AAT) உறுப்பினராகவும் இருப்பதோடு UK இன் பட்டய மேலாண்மை கணக்காளர்களின் இறுதிப் போட்டியாளராகவும் (CIMA) இருந்துள்ளார் .

திரு. அதுல பண்டாரநாயக்க

உதவி பொது முகாமையாளர் – இடர் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS)

திரு. பண்டாரநாயக்க அவர்கள் , நிதி, மூலோபாய திட்டமிடல் மற்றும் MIS ஆகியவற்றில் 19 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் சன் மட்ச் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் ஆரம்பித்த அதே சமயம் ஏர்லின் கோர்ட் குரூப் ஓஃப் கம்பெனிகள், அசெட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் ஓரியண்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்தார் வகித்துள்ளார் .

திரு. பண்டாரநாயக்க அவர்கள் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் நிதித்துறையில் MBA நிபுணத்துவம் பெற்றுள்ளதோடு , வணிகம் மற்றும் நிதியில் முதுகலை டிப்ளோமா (CA Sri Lanka), வணிகம் மற்றும் கணக்கியலில் நிர்வாக டிப்ளோமா (CA Sri Lanka) மற்றும் கடன் மேலாண்மையில் டிப்ளோமா (IBSL) ஆகிய கற்கைநெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.திரு. பண்டாரநாயக்க அவர்கள் லீசிங் மற்றும் வாடகை கொள்முதல் சான்றிதழ் பாடநெறியையும் (IBSL) பட்டய வரி ஆலோசகரின் (CA Sri Lanka) சான்றிதழ் கற்கைநெறியையும் பூர்த்தி செய்துள்ளதோடு சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் (CMA – ஆஸ்திரேலியா) உறுப்பினராகவும் உள்ளார்.

திரு நிலந்த பெரேரா

மனித வளத்துறை தலைவர்

திரு. நிலந்த பெரேரா அவர்கள் மனித வள முகாமைத்துவத்தில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.

இவர் PMF இல் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இவர் Orient Finance PLC, Ceylinco General Insurance PLC இல் மனிதவளத் தலைவராகவும், லக்தரனா முதலீட்டின் HR ஆலோசகராகவும்பணியாற்றியுள்ளார்.அத்தோடு தான் கொண்டிருந்த முன்னாள் பதவிகள் மூலம் நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், முறையான மனித வளப் பிரிவுகளை அமைத்தல் மற்றும் நிறுவனத்திற்குள் செயல்படும் மனிதவள தகவல் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளார் .
திரு. நிலந்த பெரேரா அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தில் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிகக் கற்கையில் முதுகலைப் பட்டத்தையும், B.Sc பட்டத்தையும் பெற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மனித வள மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ள இவர் பணியாளர் மேலாண்மை பட்டய நிறுவனத்தில் (CIPM) பட்டய உறுப்பினர் ஆவார்.

மேலும் இவர் பணியாளர் மேலாண்மை பட்டய நிறுவனத்தில் (CIPM) வருகை விரிவுரையாளராக கடமையாற்றுவதோடு JFS ஹோல்டிங்ஸ் வாரியத்தின் சுயாதீன பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திரு.சம்பத் குமார

உதவி பொது முகாமையாளர் – உள் தணிக்கை பிரிவு

திரு கே ஜி சம்பத் குமார அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் BSc (நிதி) (Sp) பட்டமும், மேலாண்மை பட்டதாரி நிறுவனத்தில் (PIM) MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA) இணை உறுப்பினராக உள்ளார். KPMG, CDB Finance PLC, Richard Peiris Finance Ltd மற்றும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான Samsung India Electronics Ltd உள்ளிட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியதன் மூலம் நிதி மேலாண்மை, இடர் மேலாண்மை மற்றும் தணிக்கை துறை ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ்

தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் தலைமைத் திட்டமிடல் அதிகாரி

வங்கியியல் மற்றும் நிதித்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட பேராசிரியர் அஜித் மெடிஸ்
PMF Finance PLCக்கு PMF Finance PLC-க்கு தனது அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி வருவதன் மூலம் ஆலோசனை திட்டங்களில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகிறார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் PMF இல் இணைவதற்கு முன்னர், 20 வருடங்களுக்கும் மேலாக களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளார் .இதற்க்கு முன்னதாக இவர் பீப்பிள்ஸ் மெர்ச்சன்ட் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளராகவும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி PLC ல் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்டவர் .அந்தவகையில் களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை (சிறப்பு) கௌரவப் பட்டத்தை பெற்றுள்ளதோடு , ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் (PIM) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதையும் பெற்றுள்ளார்.மேலும் மலேஷியாவின் மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மூலோபாய கற்கை நெறியில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார் .

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதித்துறை சார்ந்த பல்வேறு ஆலோசனை திட்டங்களில் பணியாற்றியுள்ளார் . இதில், அவர் Alliance Finance PLC நிறுவனத்தில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிதி அல்லாத துறை நிறுவனங்களில் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு என்பதோடு , 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் பல்வேறுபட்ட நிலைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் அஜித் மெடிஸ் அவர்கள் நிதி நிறுவனங்களின் கிளை செயல்பாடுகள், விற்பனை, கடன் வசூலிப்பு, வைப்பு திரட்டுதல், தங்கக் கடன் மற்றும் குத்தகை வசதிகள் ஆகிய துறைகளில் திட்டமிடல் மற்றும் பயிற்சி வழங்குவதில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார்